Friday, May 1, 2009

அரசியல்வா(வியா)திகளுக்கு மருந்து


இந்தியாவின் பிரமாண்ட திருவிழா தேர்தல் நெருங்கிவிட்ட்து.. இந்த சீசனில் அரசியல்வாதிகளுக்கு சில நோய்கள் வரும்..


தி.மு.க கூட்டணி

கலைஞர்;

வியாதி..

கலைஞருக்கு வந்திருக்கும் வியாதி குழப்பம்...ஒரு நாள் விடுதலை புலிகள் போராளிகள் பிராபகரன் எனது நன்பர் என்பார்.. அடுத்த நாள் விடுதலை புலிகள் தீவிரவாதத்தை விட்டு விட வேண்டும் என்பார்..இப்ப்டி சொன்னால் காங்கிரஸ் கோபம் கொள்ளூம், இல்லையென்றால் தமிழக மக்கள் கோபம் கொள்ளவார்கள்..இதற்கிடையே உண்ணாநிலை வேறு..

மருந்து...

இதற்கு ஒரே மருந்து தேர்தலில் வெற்றி என்ற செய்தி மட்டுமே..




காங்கிரஸ்:

வியாதி...

இவர்களுக்கு இருக்கும் வியாதி புலிக்கடி... புலி என்ற வார்த்தையே இவர்களுக்கு ஆகாது.. அது சாம்பாரில் போடும் புளியாக இருந்தாலும் சரி..புலிகள் சரணாலயத்தில் உள்ள புலிகள் பற்றி பேசினாலும் அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்பார்கள்

மருந்து...

புலிகள்(காட்டு புலிகள் உட்பட) முற்றிலும் அழிந்தார்கள் என்ற செய்தியே




அ.தி.மு.க கூட்டணி

அம்மா

வியாதி:

அம்மா விற்கு வந்திருக்கும் வியாதி வயிற்றெரிச்சல்..தன்னை மீறி யாரும் இருக்க கூடாது..தான் மட்டுமே தமிழ் மக்களின் தெய்வமாக இருக்கவேண்டும்..இதுவரை விடுதலை புலிகளை ஒழிக்கவேண்டும் என்றவர் தற்பொழுது தனி ஈழம் அமைக்க பாடுபடுவேன் என்கிறார்..

மருந்து:

தமிழ் ஈழக்காடுகளில் உள்ள பென் புலிப்பால்(விடுதலை புலிகள்
அல்ல்)..இதற்குதான் இந்திய ரானுவத்தை அனுப்புகிறார் அம்மா



மருத்தவர் அய்யா

வியாதி:

இவருக்கு வந்திருக்கும் வியாதி நிற குருடு.ஒவ்வொரு தேர்தலின் போதும் இவருக்கு ஒரு நிறம் மட்டுமே தெரியும்.இன்று இவருக்கு பச்சை நிறம் மட்டுமே தெரியும்.. தேர்தல் முடிந்தபின் சிறிது காலத்தில் மஞ்சல் நிறம் தெரிய ஆரம்பிக்கும்..அன்று முதல் கூட்டணி கட்சியின் திட்ட்ங்கள் அனைதுதும் கருப்பாக தெரியும்..

மருந்து...

இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் திட்டத்தையும் இவர் எதிர்தித்தால் இதற்கு மருந்தே இல்லை

தோழர்கள்.

வியாதி:

அவர்களை போலவே அவர்களின் வியாதியும் எளிமையானது..அவர்களுக்கு சறிது ஞாபக மறதி..தாங்கள் இருந்த கூட்டணியை விட்டு வேறு கூட்டணியில்(மூன்றாவது அணீ) இருப்பார்கள் பிறகு பழையபடி சேர்ந்து
விடுவார்கள்

மருந்து:

யாராவது ஒருவர் ஞாபகபடுத்தினால் போதும்