/////ஒரு படத்தில் விவேக் சொல்லுவார் " பீக் அவர்ல எந்த சிட்டி பஸ் ஸ்டாப் இல் நிக்கும்" /////
ஆனால் உன்மையில் சிட்டி பஸ் எங்கு நிற்கும்னு யாராலும் சொல்ல முடியாது...
ஸ்டாப் இல் சுமார் 200 அடி தூரத்திற்குள் எங்கு வேண்டுமானாலும் நிறுத்துவார்கள் நாம் ஓடி சென்று ஏற வேண்டும்..சில சமயங்களில் நிறுத்தாமல் கூட செல்வார்கள்
டிக்கெட் ப்ரெச்சனை அடுத்தது.... ஏற்கனவே எம் சர்வீஸ்,ஏக்ஸ்ப்ரெஸ்,டீலக்ஸ் என்று பயன சீட்டு விலை ஏறி விட்டது..
இதில் 50 காசு திருப்பி குடுப்பது நடவாத காரியம்..பெருவாரியான நடத்துனர்கள் 50 காசு சில்லரை இல்லை எனறு கூட சொல்ல மாட்டார்கள்..
பயனிகளின் நண்பன்.... இரண்டு நாட்களுக்கு முன்னர் பஸ்ஸில் சென்று கொண்டிருந்தபோது நடத்துனர் ஒரு பெரியவரை மிக மோசமாக திட்டி கொண்டிருந்தார்... காரணம் அந்த நிறுத்ததில் அவர் இறங்கு வேண்டும் என்பதை நடத்துனரிடம் முன்னதாக சொல்லவில்லை என்பதே...
எனக்கு சில கேள்விகள்
1.எங்கு வேண்டுமானாலும் நிறுத்துவதற்கு பேருந்து நிறுத்தங்கள் எதற்கு
2.பயன சீட்டீன் விலையை 2.50, 3.50 என்று வைக்கும் போது சில்லரையை இவர்கள தானே கொண்டு வரவேண்டும்..சில்லரை இல்லை என்றாவது சொல்லலாமே..
3. அந்த நிறுத்ததில் இறங்கு வேண்டும் என்பதை நடத்துனரிடம் முன்னதாக சொல்லவேண்டும் என்றால் பேருந்து நிறுத்தங்கள் எதற்கு..அனைத்து நிறுத்தங்களிலும் நிறுத்த வேண்டும் என்பது விதி அல்லவா..
தனியார் பேருந்துகள் போட்டிக்கு இருந்தால் இவர்கள் இப்படி செய்வார்களா...தங்களை விட்டால் வேறு யாரும் இல்லை என்ற ஆணவமே இதற்கு காரணம்...
இதில் சில நாணயமான நடத்துனர்களும் உள்ளனர்...
No comments:
Post a Comment